இலவசமாக டிரெய்லர் திரையிடப்படும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியானது. அப்போது, தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் பீஸ்ட் டிரைலர் பார்க்க குவிந்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் திரையரங்கின் கண்ணாடி, நாற்காலிகளை சேதப்படுத்தியுள்ளனர். நுழைவாயிலில் இருந்து ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றதில் கண்ணாடி உடைந்ததாகவும் ட்ரெய்லர் பார்த்த உற்சாகத்தில் இருக்கைகள் மீது ஏறி ஆடியதில் நாற்காலிகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகள் ஏற்படும்போது திரையரங்கத்தின் உரிமத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.