ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்தாண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்த தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
அப்போது, தலிபான்களுக்கு அஞ்சி பலரும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு பல இடங்களில் பயங்கரவாத தாக்குதலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோஸ்ட் மற்றும் குணார் ஆகிய இரு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கு ஆப்கானிஸ்தானின் அமைதி கண்காணிப்பகத்தின் நிறுவனர் மற்றும் பத்திரிகையாளரான ஹபீப் கான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்தி வரும் போர் குற்றங்களை கவனத்தில் கொள்ளும்படி சர்வதேச குற்ற நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்புக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து பாக்., தூதருக்கு தலிபான்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
This website uses cookies.