ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்தாண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்த தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
அப்போது, தலிபான்களுக்கு அஞ்சி பலரும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு பல இடங்களில் பயங்கரவாத தாக்குதலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோஸ்ட் மற்றும் குணார் ஆகிய இரு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கு ஆப்கானிஸ்தானின் அமைதி கண்காணிப்பகத்தின் நிறுவனர் மற்றும் பத்திரிகையாளரான ஹபீப் கான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்தி வரும் போர் குற்றங்களை கவனத்தில் கொள்ளும்படி சர்வதேச குற்ற நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்புக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து பாக்., தூதருக்கு தலிபான்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.