பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டது.
தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் நடைபெற்றது. காலை 7 மணியளவில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதன் பிறகு பாலமேட்டிலுள்ள பல்வேறு கோவில்களின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது-
10 சுற்றுகளாக மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இதில், 14 காளைகளை அடக்கிய பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்தார். இவர் 2020, 21மற்றும் 22ம் ஆண்டுகளில் முதல் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி 2வது பரிசும், 8 காளைகளை அடக்கிய பாண்டீஸ்வரன் 3வது இடத்தையும் பிடித்தனர். சிறந்த காளையாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராக்கெட் சின்னகருப்பு தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கும் அரசின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மொத்தம் 42 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
This website uses cookies.