பழனி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமை தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் அதிருப்தியடைந்த நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி அதிகாரிகள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் வாகன போக்குவரத்து கூட்ட நெரிசலில் பல மணி நேரம் சிக்கி தவிப்பதை தவிர்க்க பக்தர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான அனைத்து துறை அலுவலருக்கான கலந்தாய்வு கூட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையிலும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலையிலும் அனைத்து துறை அதிகாரிகள் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களுக்கும் கூட்டம் நடைபெற்ற வளாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்து அதிகாரிகள் வெளியே வரும் பொழுது, பழனி நகராட்சி நகர்மன்ற துணைத் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளருமான கந்தசாமி, அதிகாரியுடன் திமுக எம்பி முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ஏன் எனக்கு தகவல் சொல்ல வில்லை எனவும், ரகசிய கூட்டம் நடைபெறுகிறதா எனக் கேள்வி எழுப்பிய அவர், திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் விலகி இருக்கிறதா..?, என்று காட்டமாக கேட்டார். தொடர்ந்து, முதல்வர் கையெழுத்து போட்டு தான் பதவிக்கு வந்துள்ளேன் என்றும், அவமானப் படுத்துகிறீர்களா..?? என பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக வைத்தார்.
நகர்மன்ற துணைத் தலைவரின் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.