ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாளான இன்று வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுது போராட்டம் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம், பொடாவூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டு அதற்கான பணிகளை துவக்கி உள்ளது.
இந்நிலையில், இதற்கான நில எடுப்புப் பணி முதல் கட்டமாக பொடவூர் கிராமத்தில் சுமார் 122 நபர்களுடைய நிலத்தினை கையகப்படுத்தும் நோக்கில், அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுகுறித்து ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் 30 நாள்களுக்குள் இதற்கான மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழிப் போராட்டத்தின் 600வது நாளான இன்று விவசாயத்தை கைவிட மாட்டோம் என ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாகாத்தம்மன் கோவிலில் இருந்து பேரணியாக வயல்வெளிக்கு சென்றனர்.
வயல்வெளிக்கு சென்ற பகுதி மக்கள் வயல்வெளியில் அறுவடைக்கும் முன்னதாக பூத்துக் குலுங்கியிருந்த நெல்மணிகளை கட்டிப்பிடித்தவாறு, இரண்டாவது பசுமை விமான நிலையத்துக்கு எதிராக கோஷமிட்டவாறு முக்காடு போட்டு அழுதனர். ஏகனபுரம் பகுதியில் மட்டுமே சுமார் 300 ஏக்கர் நவரை பருவம் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினந்தோறும் இரவு நேர அறவழிப் போராட்டம் நடத்தி வந்த ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்களின் கோரிக்கைகளை செவிசாய்க்காத திமுக அரசை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் 600வது நாளான இன்று வயல்வெளிக்கு சென்று நெல்மணி கதிர்களை கட்டிப்பிடித்தவாறு முக்காடு போட்டு ஆண் பெண் சிறுவர் சிறுமியர் என அனைவரும் சேர்ந்து ஒப்பாரி வைத்து அழுத்தது காண்போர் கண்களை குளமாக்கியது.
விமான நிலைய பாராட்டு குழுவின் வரை கட்டுப்படுத்த சுமார் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.