தண்ணீர் இன்றி தவித்த மக்கள்… அதிகாரிகளுக்கு போன் போட்டு டோஸ் விட்டஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!!

தண்ணீர் இன்றி தவித்த மக்கள்… அதிகாரிகளுக்கு போன் போட்டு டோஸ் விட்டஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!!

நாளைக்கு தீபாவளி 15 நாளா தண்ணீர் வரல, இன்று மாலைக்குள் விராலிமலை மக்களுக்கு குடிநீர் வராவிட்டால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை விராலிமலை மீது எப்போதும் தனி கவனம் செலுத்தக்கூடியவர் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்த போதே ஆயிரம் பணிகள் இருந்தாலும் விராலிமலை மக்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஒதுக்கிவிடுவார்.

எளிமையா எல்லோரிடமும் பேசி பழகும் விஜயபாஸ்கர், தனது தொகுதியில் இருந்து யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாமல் சென்று விடுவார்.

இதனாலயே தொடர்ந்து 3வது முறையாக 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவரை வெற்றி பெற வைத்தனர்.

இந்த நிலையில் தான் 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை என விராலி மக்கள் புகார் கொடுத்ததையடுத்து, சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிக்கு போன் போட்ட விஜயபாஸ்கர், 15 நாளா தண்ணீர் வரல, என்ன விளையாடுறீங்களா? காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் தருகிறோம் என சட்டசபையில் மட்டும் அமைச்சர் பேனில் போதுமா? தண்ணீர் எங்கே என போனில் ஸ்பீக்கர் போட்டபடி பேசினார்.

இதையடுத்து விஜயபாஸ்கர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரி, ஒரு கட்டத்தில் அண்ணே தண்ணர் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம், கொடுத்திடலாம் அண்ணே என கூறி சரண்டர் ஆனார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

8 minutes ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

19 minutes ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

2 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

2 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

2 hours ago

This website uses cookies.