பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு : ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி..!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 8:10 pm

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.

சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சியினர் கடும் கண்டங்களை பதிவு செய்திருந்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

இதையடுத்து அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனல் கண்ணன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!