பன்றி முகம் கொண்ட பெரியார் போட்டோ.. AI மூலம் எடிட் : பிரபல அரசியல் கட்சி கடும் விமர்சனம்!!!

பன்றி முகம் கொண்ட பெரியார் போட்டோ.. AI மூலம் எடிட் : பிரபல அரசியல் கட்சி கடும் விமர்சனம்!!!

தமிழ்நாட்டில், சாதி பெயரை சொல்வதற்கே மக்கள் தயங்கும் நிலையை உருவாக்கியவர் தந்தை பெரியார்.

சமூக நீதி, சுயமரியாதை, திராவிட சித்தாந்தங்களை பிடிக்காத சிலர் அவரது சிலையை உடைப்பது, சாயம் பூசுவது என தொடர்ந்து இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் நவீன வடிவமாக பெரியாரின் உருவத்துடன் பன்றி முகத்தை இணைத்து ஒரு புகைப்பத்தை வடிவமைத்து உள்ளனர் விஷமிகள்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த படத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் இந்த புகைப்படத்தை வெளியிட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரும் இல்லை. விமர்சனங்களை ஏற்காதவரும் இல்லை. அவர் குறை இல்லாத மனிதரும் இல்லை. தான் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்கும்படி அவர் ஒருபோதும் சொன்னவரும் இல்லை.

பெரியாரிடம் குறைகளும் உண்டு. நிறைகளும் உண்டு. ஆனால் அவர் தனக்காக எதையும் கூறவில்லை. தான் உயரவேண்டும், சம்பாதிக்கவேண்டும், பதவிக்கு வரவேண்டும் என்று எப்போதும் சிந்திக்காதவர்.

அதற்காக மெனக்கெடாதவர் என்பதுமட்டும் உறுதியாக சொல்லமுடியும். அவரின் வாழ்நாள் முழுவதும் விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதை குறித்து சிந்தித்தவர் செயல்பட்டவர். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக களமாடியவர். மதத்தின் பெயரால், மனு தர்மத்தின் பெயரால், சனாதனத்தின் பெயரால் நடைபெறும் சண்டாளத்தனங்களை சாடி சாட்டையை சுழற்றியதோடு சம தர்மம், சமத்துவம் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய சமரசமிற்றி போராடிய ஒரு புரட்சியாளர். யாரையும் எதனைக் கொண்டும் ஏமாற்றுவதை தடுத்ததால் அவரை சிலருக்கு பிடிக்காது. பலருக்கு பிடித்தது.

அவர் ஏற்படுத்திய விழிப்பணர்வுதான் இன்றும் ஆதிக்க வர்கத்தின் அடிவயிற்றில் புளியை கரைக்கிறது மற்றபடி அவர் மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட மடமைதனை சாடினார். மனிதத்தை நேசிக்கச் சொன்னார்.

அன்று அவர் ஏற்படுத்திய தாக்கம் இப்போது தமிழகத்தையும் தாண்டி பரவுகிறது அதுதான் சங்கிகளை கதிகளங்க வைக்கிறது. அதனால் அவரை பல வகையில் வன்மத்துடன் பலவற்றை கக்குகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த படம். இதனாலெல்லாம் பெரியாரை இழிவுபடுத்திவிட முடியாது. அவர் பக்திமான்களிடமும் வாழ்கிறார். அவர் விதைத்த விதைகள் இன்று விரிச்சகமாய் வியாபித்து நிற்கிறது. அவரின் தத்துவங்கள் யாவும் பக்தனையும் பக்குவப்படுத்தி உள்ளது. சங்கிகளே உங்கள் வன்மம் எல்லாம் ஒரு வெங்காயமும் செய்யாது பெரியார் வாழ்கிறார், வாழுவார்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

1 day ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

1 day ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.