புதுச்சேரி : அக்னிபத் திட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் தூண்டப்படுகிறது என்றும் எதிர்வரும் பாராளுமன்ற புதுச்சேரியில் பாஜக போட்டியிட தயாராகி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தேசத்திற்கான சேவை செய்ய சிறந்த பாதையாக அக்னிபத் திட்டம் உள்ளது என்றும் இதன் மூலம் இராணுவத்திற்கு திறமை மிக்க வீரர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
மேலும் அக்னிபாத் திட்டம் பல நாடுகளில் உள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இளைஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் திட்டம் உள்ளது என்றார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் தூண்டப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தலைமையிலான மத்திய அரசு செய்துள்ளது என்றும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் எதையும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும் பாஜக ஆட்சியில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்கள் வைத்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருந்தது என்றார்.
நாடுமுழுவதும் சென்னை காசிமேடு, கொச்சி உட்பட 5 துறை முகங்கள் தேர்வு செய்யப்பட்டு
சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோல் புதுச்சேரி அதி வேக வளர்ச்சி அடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்த அவர் ஒற்றை தலைமை அதிமுக உட்கட்சி விவகாரம் பதில் அளிக்க முடியாது என்றும் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக போட்டியிட தயாராகி வருகிறது என்றார்.
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
This website uses cookies.