விழுப்புரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மற்றும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் 12ஆம் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்த மாணவன் ஜோமன் ராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக வளவனூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வடவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் இவரது மகள் சத்தியவதி தேவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று தேர்வு எழுதிய நிலையில், இன்று தேர்வு முடிவு வெளியானது.
இதில், சத்தியாவதி இயற்பயியல், வேதியியல் மற்றும் விலங்கியலில் பாடத்தில் தோல்வி அடைந்ததால், பள்ளி மாணவி மனம் உடைந்து சோகமாக காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு பரிதாபமாக இறந்துள்ளார்.
மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவலறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து வளத்தி போலிசார் விசரானை மேற்கொண்டு வருகின்றனர். சத்தியவதியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்தந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.