பெங்களூரூவில் நடந்தக் கூட்டத்தில் திருமாவளவனின் பேச்சை எதிர்த்து, பிரதமர் மோடிக்கு ஆதரவாக சிலர் முழங்கியதால், மேடையை விட்டு அவர் வெளியேறிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பாஜக நுழையக் கூடாது அல்லது வளர்ச்சியடையக் கூடாது என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸை கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி அண்மை காலமாக மிஞ்சி விட்டது. சனாதானத்தை கையில் எடுத்து பாஜகவை திருமாவளவன் தீவிரமாக எதிர்த்து வருகிறார்.
தனது கட்சி சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள் மட்டுமல்லாது, பிற கட்சியின் மேடைகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில், பெங்களூரூவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதற்கு, அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பிரதமர் மோடியை வில்லன் எனக் குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்க்காத வகையில், அங்கிருந்தவர்கள் இந்தக் கருத்தை எதிர்த்து கோஷமிட்டுள்ளனர். மேலும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பட்டபத் ஸ்ரீனிவாசன் என்பவர், “பிரதமர் மோடி வில்லன் இல்லை. இந்திய நாட்டின் ஹீரோ,” என்று திருமாவளவனை கண்டித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, திருமாவளவன் அங்கிருந்து பாதுகாப்போடு வெளியேறிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விரைவில் இதுபோன்று தமிழகத்தில் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பாஜகவினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.