தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்று சென்னையில் உரையாற்றி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உரையை துவங்கும் போது ‘வணக்கம்’ என துவங்கி உரையை துவங்கினார். மேலும், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப தேன் வந்து பாய்ந்தது காதினிலே.. ‘ என்ற பாரதியின் வரிகளை குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது :- தமிழகம், தமிழ் மொழி, தமிழக மக்கள், தமிழர்களின் கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. மிகவும் அழகானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழகத்தில் வருவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும்.
செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 16 பேரில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கேன்ஸ் பட விழாவில் எல்.முருகன் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்று சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார்.
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி வேகமெடுக்கும். தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
நட்பு நாடான இலங்கைக்கு அனைத்து வகையிலும் இந்திய அரசு உதவி வருகிறது. இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். இலங்கையில் யாழ்பானத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான், எனக் கூறினார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.