பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான வினேஷ் போகத், நிர்ணயித்த அளவை விட 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வினேஷ் பதக்கத்தோடு வருவார் என இந்தியர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் ஒவ்வொரு இந்தியரையும் பெரும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. நிர்ணயித்த அளவை விட கூடுதலாக 2 கிலோ எடையுடன் இருந்துள்ளார் வினேஷ் போகட். இதையடுத்து சில நாட்களாக இரவு முழுக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட வினேஷ் போகத் 1.900 கிலோ கிராம் எடையை குறைத்துள்ளார்.ஆயினும் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகுதி நீக்கம் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வினேஷ், நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.
இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.அதே சமயம், நீங்கள் தன்னம்பிக்கையோடு உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு.வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக நிற்க காத்து இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.