பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான வினேஷ் போகத், நிர்ணயித்த அளவை விட 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வினேஷ் பதக்கத்தோடு வருவார் என இந்தியர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் ஒவ்வொரு இந்தியரையும் பெரும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. நிர்ணயித்த அளவை விட கூடுதலாக 2 கிலோ எடையுடன் இருந்துள்ளார் வினேஷ் போகட். இதையடுத்து சில நாட்களாக இரவு முழுக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட வினேஷ் போகத் 1.900 கிலோ கிராம் எடையை குறைத்துள்ளார்.ஆயினும் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகுதி நீக்கம் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வினேஷ், நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.
இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.அதே சமயம், நீங்கள் தன்னம்பிக்கையோடு உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு.வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக நிற்க காத்து இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.