நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியில்லை என்று பாமக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் தற்போது வரை அந்த கூட்டணியிலே தொடர்ந்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
பாஜக மற்றும் அதிமுக பாமகவை இழுக்க போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாமக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக திட்டமிட்டுள்ளது. மேலும், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமதாஸ் கூறுகையில், “பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்து போட்டியிட நாம் இப்போது தயாராக இல்லை. கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். மாநில நலன், தேசிய நலன் மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளோம். குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்,” எனக் கூறினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.