சேலம் அருகே பாமக பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் அன்புமணி ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் பேருந்து நிலையம் வந்த அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவிட்டு மேடை அருகே வந்தார்.
அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக திடீரென அனைவரும் மேடை மீது ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை சுதாரித்துக் கொண்ட அன்புமணி ராமதாஸ், மேடையில் இருந்து தாவி கீழே குதித்தார். இதனால், எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் சிறிய அளவு டேபிள் மூலம் உயரமாக நின்று தனது பொதுக்கூட்ட பிரச்சாரத்தை அன்புமணி ராமதாஸ் தொடர்ந்தார்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.