நெப்போலியன் போயிட்டான் ‘வீரன்’ வந்துட்டான்…. பிரச்சாரத்தின் போது தமிழக அரசை பாட்டு பாடி கிண்டல் செய்த ராமதாஸ்…!!!

ஆவதும் பெண்ணாலே… ஆனதெல்லாம் பெண்ணாலே.. அழிவது என்பதை மட்டும் நான் சொல்ல மாட்டேன் என்றும், புதிதாக வந்துள்ள வீரன் சொல்லுவான் என்று மேடையில் பாட்டு பாடி பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணியை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இந்த தருமபுரி மாவட்டத்தில் நான் பிறக்கவில்லையே என அடிக்கடி கூறி வேதனை பட்டு இருக்கிறேன்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

சௌமியா அன்புமணியின் வெற்றியைக் காண மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த நான் காத்திருக்கிறேன். அந்த வெற்றியின் போது நீங்கள் அனைவரும் ஆனந்த கூத்தாட வேண்டும். குடி தண்ணீரை கூட கொடுக்காத அரசாக இந்த நாடு செயல்பட்டு கொண்டிருந்தது. இதனை நினைத்து கோபம் அடைந்து நான் எல்லோரையும் திரட்டி மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினேன்.

அப்போது கலைஞர் கொஞ்சம் பொறுங்கள் பொறுங்கள் என கூறினார். அதையும் தாண்டி மிகப்பெரிய போராட்டங்களை கையில் எடுத்ததன் விளைவாக இன்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது நீங்கள் குடிக்கும் நீர் கூட என்னுடைய போராட்டத்தின் விளைவாக வந்தது.

திமுக, அதிமுகவினர் மாறி மாறி ஆட்சி புரிந்து வருகின்றனர். ஆனால் குடிநீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை கேட்டால் வருது…வருது … எனக் கூறுகிறார்களே தவிர, தண்ணீர் வந்த பாடு இல்லை. ஜப்பானில் இருந்து வருகின்றது, கடன் கேட்டிருக்கிறோம் என்று கூறுகின்றார்களே.

மேலும் படிக்க: ரோடு ஷோ நடத்தக்கூடாது : பாஜக தலைவர் நட்டா பேரணிக்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுப்பு!!

இங்க சாராயம் விற்று வந்த பணத்தை என்ன செய்தார்கள்?. தர்மபுரி வழியாக செல்லும் காவிரி நீரை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு சென்றீர்களே, தர்மபுரி மாவட்டத்திற்கு ஏன் கொண்டு வரவில்லை என கேட்டு போராடினவன் இந்த ராமதாஸ். பெண்கள் மனது வைத்தால் எல்லாமே நடக்கும்.

ஆவதும் பெண்ணாலே.. ஆனதும் பெண்ணாலே.. ஆவதெல்லாம் பெண்ணாலே.. அழிவது என்பதை மட்டும் நான் கூறமாட்டேன். ஏன்னா அதை சொல்வதற்கு தான் வீரன் வந்திருக்கிறான். நெப்போலியன் போயிட்டான் வீரன் வந்துட்டான் என பாட்டு பாடினார்.

நம் பகுதியில் வேலைவாய்ப்பு கிடைக்க, பூரண மதுவிலக்கு வர, குடிநீர் பிரச்சினை தீர, மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்க என கூறி சௌமியா அன்புமணிக்கு வாக்குகளை சேகரித்தார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

48 minutes ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

53 minutes ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

2 hours ago

3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!

பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…

2 hours ago

ஜெனிலியாவையே மறந்துட்டீங்களேப்பா- சச்சின் பட துணை நடிகைக்கு திடீரென குவிந்த ரசிகர்கள்

சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…

2 hours ago

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

3 hours ago

This website uses cookies.