2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை;15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை; விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017 மற்றும் 2019 ஆண்டு காலகட்டத்தில் அதே பகுதியில் வசித்து வரும் உறவினர்களான தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார், அருண், மகேஷ், ரமேஷ், துரைராஜ், மோகன், செல்வம், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வ, சேகர் ஆகிய 15 நபர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர்.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் பள்ளியில் சோர்வாக காணப்பட்ட பொழுது பள்ளி ஆசிரியர் இந்த சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது உறவு முறை கொண்ட 15 நபர்கள் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது

இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பிரம்மதேசம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 15 நபர்களுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் 32,000 அபராதம் வழங்கி பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார்.இரண்டு சிறுமிகளில் ஒன்பது வயது உடைய சிறுமி கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 15 நபர்களும் அப்பா தாத்தா சித்தப்பா அண்ணன் ஆகிய நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள் ஆகும்

Sudha

Recent Posts

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

26 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

46 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

55 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

1 hour ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

3 hours ago

This website uses cookies.