கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் மீது பெங்களூரூ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், குமாரசாமி கட்சிக்கும் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக அன்பரசனையும், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக குமாரையும் நிறுத்தினர். கூட்டணி கட்சியான பாஜக கேட்டுக் கொண்டதன் பேரில் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார். இதனிடையே, முறையான தகவல்கள் இடம்பெறவில்லை எனக் கூறி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக பெயரில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து, தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு 171 ஜீ -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு மேற்கொண்டு அதிமுக பெயரை பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.