நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் மதுரை, தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகராக இருக்கிறார். சமூக அரசியல் தொடர்பான கருத்துகளையும் வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சாடி உள்ளார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். வயதான எனது பெற்றோர் கொண்டு வந்த பைகளில் இருந்த நாணயங்களை எடுக்கும்படி சொன்னார்கள்.
தொடர்ந்து இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே பேசினார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி கடுமையாக நடந்து கொண்டனர். வேலையற்றவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
சித்தார்த் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது. இவருக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், “மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.