சென்னை : சமூக வலைதளங்களில் வைரலான பிரபல நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் தமிழக அரசு சார்பில் போடப்பட்ட அன்னாதனத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி புறக்கணிக்கப்பட்டார். இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, மீண்டும் பந்தியில் அமர்ந்து சாப்பிட வைக்கப்பட்டார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பெண்ணை அழைத்து பேசினார். அஸ்வினியின் வீட்டிற்கும் முதலமைச்சர் சென்றிருந்தார். நரிக்குறவ மக்களுக்கு உதவிகளையும் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இதன் காரணமாக அஸ்வினி மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
ஆனால், திமுக அரசு வழங்கிய நலத்திட்டங்கள் எதுவும் தங்களை வந்து சேரவில்லை என்று அஸ்வினி பேசிய புகார் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது திமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனிடையே, நரிக்குறவர் சமூகத்தை எஸ்டி பட்டியலில் மத்திய அரசு சேர்த்து நடவடிக்கை எடுத்த நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து பாஜகவுக்கு அஸ்வினி நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள உணவு கடையில் 10 ரூபாய்க்கு சப்பாத்தி, புரோட்டா கேட்டு மிரட்டுவதாகவும், தர மறுத்தால் கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக அந்த பகுதியை சேர்ந்த வணிகர்கள் நரிக்குறவ பெண் அஸ்வினி மீது காவல் நிலையத்துல் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக உணவு கடை உரிமையாளர் சுலோச்சணா, எங்கள் உணவகத்தில் அடிக்கடி உணவு சாப்பிடும் அஸ்வினி, திடீரென நேற்று ரூ.10க்கு உணவு கொடுக்கும்படி பிரச்சனை செய்ததாகவும், தரமறுத்ததால் எனது கணவர் கழுத்தில் கத்தியை வைத்தாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே அஸ்வினி மீது நடவடிக்கை எடுக்கும் படி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.