இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்கே புரத்தில் நடந்த கலைத்திருவிழா எனும் நிகழ்ச்சியில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ‘மலக்குழி மரணம்’ எனும் தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்த அவர், அதில் இந்து கடவுள்களான ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமன், சீதையை இழிவுபடுத்தும் விதமான வரிகளை கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகி சுரேஷ் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், விடுதலை சிகப்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.