தமிழகத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நெருங்கியுள்ள நிலையில் தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பியது விலங்கின ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டீக்கடையில் டீ போட்டுக் கொடுப்பது, தோசை சுட்டுக் கொடுப்பது, செருப்பு தைத்துக் கொடுப்பது, சாலைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான முறைகளில் வாக்குகளை சேகரித்தனர். ஒரு சிலர் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், விஜய் உள்ளிட்டோர் போன்று வேடமணிந்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் கரந்தை பகுதியில் 4வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுபவர் சுமதி இளங்கோவன். இவரது தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரம் ஒன்றை, சிலர் நாய் மீது ஒட்டி உள்ளனர்.
தெருத்தெருவாக சுற்றி வந்த அந்த நாய் தன் மீது ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை அகற்ற தரையில் படுத்து புரண்டுகிறது. ஆனாலும் துண்டுபிரசுரம் கீழே விழவில்லை. அந்த நாய் அப்படியே சுற்றி வருகிறது. இதனை செய்தது யார்..? என்ற விபரம் தெரியவில்லை.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த செயல் விலங்கின ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.