புதுச்சேரியில் மின்துறை அலட்சியத்தால் மின்கம்பி அறுந்து விழுந்ததில், வாலிபர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அக்ரகாரம் வீதியைச் சேர்ந்தவர் செல்வி (60). இவர் தனது மகன் கணேசன் (21), மகள் சரண்யா மற்றும் தனது உறவினர் தேன்மொழி (40) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டின் அருகே தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை கவனிக்காத கணேசன், மின்கம்பியை மிதித்தபோது அவர் மீது மின்சாரம் தாக்கியது.
இதனை பார்த்த கணேசனின் சித்தி தேன்மொழி, அவரை காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் கணேசனின் தாய் செல்வி மற்றும் சரண்யா ஆகிய இருவருக்கும் லேசான காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தாழ்வாக சென்ற மின்கம்பி குறித்து மின்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததாலும், மின்துறை அலட்சியத்தால் கணேசனும், தேன்மொழியும் உயிரிழந்ததாகக் கூறி அவர்களது உறவினர்கள் முத்தியால்பேட்டை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் முத்தியால்பேட்டை போலிசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைய செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டதால் சுமார் அரை மணி நேரம் முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.