ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பல்வேறு கால கட்டங்களில் அங்கு ஆட்சி செய்த மன்னர்கள் விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை இந்த கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினர்.
இந்த நகைகள் அனைத்தும் ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறைக்குள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் உள்ளே உள்ள அறை குறித்து மர்மம் நிலவி வருகிறது. இந்த அறை கடைசியாக 1978- ல் திறக்கப்பட்டது. அப்போது அதை அருகில் இருந்து பார்த்தவர் நகைகள் அனைத்தும் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இந்ததாக கூறினர்.
பொக்கிஷ அறை குறித்து ஆராய 1984 ல் தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்ய சென்றனர். ஆனால், பொக்கிஷ அறையின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பாம்புகள் உள்ளே இருப்பதாகவும் கூறி திரும்பி வந்து விட்டனர்.
இந்நிலையில் 46 ஆண்டுகளுக்கு பிறகு பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி தொடங்கி உள்ளது.. தொல்லியல் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலையில் ரத்னா பந்தர் என்னும் பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. பொக்கிஷ அறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகள் முழுவதும் வீடியோ ரெக்கார்டு செய்யப்படும். மிகவும் ரகசியமாகவே இது வைத்திருக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் 1.28 மணிக்கு நல்ல நேரம் பார்த்து பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. மதிப்பீட்டு பணிகள் முடிய சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.