மின்வெட்டு ஏற்பட்ட போது நடந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம், மின் தடை தொடர்பாக பொதுமக்கள் நேரடியாக புகார் அளித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களிடையே மின்சாரத்தின் பயன்பாடும் அதிகரிக்கிறது. அதேவேளையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழத்தில் நிலவும் மின்வெட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால், மின்வெட்டு வருவது சகஜம்தான் என்றும், இதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகத்தான் மின்தடை ஏற்படுவதாகவும், அதற்கு மாற்று நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின் கரண்ட் இல்லாத பகுதியில் பேட்டரி லைட் வெளிச்சத்தில் நடந்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
அவர் நடந்து வந்து கார் ஏற முற்பட்ட போது, அங்கிருந்த பொதுமக்களில் சிலர், “ஐயா, எங்க ஊர்ல அடிக்கடி இப்படித்தாங்க கரண்ட் பிடுங்கி விடுராங்க… பார்த்து நடவடிக்கை எடுங்க,” என்று கூறுகின்றனர்.
இதனைக் கேட்ட முதலமைச்சர் பாக்குறேன் என சொல்லிவிட்டு நகர்ந்து செல்கிறார்.
மின்வெட்டு திமுக ஆட்சியின் நீக்க முடியாத வடுவாக இருந்து வரும் நிலையில், இப்படி முதலமைச்சர் ஸ்டாலின் வரும் போது கூட பவர் கட் செய்கிறார்களே, என்று அப்பகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.