வேலூர் ; அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மின்வாரிய 2 உதவி பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டும் மின் இணைப்பு வராததால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன் விழாவை விரைந்து முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு காட்பாடி, தாராப்படவேடு ஆகிய பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய 2 பேரை காட்பாடி வடுங்கன்தாங்கள் துணை மின் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் பேசும் போது மின்வெட்டு ஏற்பட்டதால், அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
This website uses cookies.