விஜயகாந்த் மறைவு குறித்து சாமியார் ஒருவர் அருள்வாக்கு கூறியதை கேட்டு அவரது மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா கண்கலங்கினார்.
கடந்த 28ம் தேதி தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்களின் அஞ்சலிக்கு பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது, அங்கு இருந்த சாமியார் ஒருவர், காசி விஸ்வநாதர் தன் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி கூறியதாகவும், அதனாலேயே இங்கு வந்ததாகவும் கூறினார்.
மேலும், கேப்டன் எங்கும் போகவில்லை என்றும், உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருப்பதாக கூறிய அவர், திடீரென விஜயகாந்த் குரலில் பேசினார். “என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன். பிரேமா உன் இதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன். நான் உன்ன விட்டு எங்கயும் போகல,” என கூறினார். இதைக் கேட்டு பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.