குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவமதித்ததாக தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு நேற்று ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவரது இல்லத்துக்கு சென்று விருதை நேரில் வழங்கினார். அப்போது, விருதைப் பெற்ற அத்வானியின் அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பது போன்றும், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நின்றிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திமுக எம்பியும், தூத்துக்குடி வேட்பாளருமான கனிமொழியும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பாஜக ஆட்சியில் அரசியல் சாசன தலைவரின் நிலை இதுதான். பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இந்தப் புகைப்படம் அப்பட்டமாக காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.