இளையராஜா பிரச்சனையை விடுங்க…. பிரதமர் மோடியே திராவிடர்தான் : ஒரே போடு போட்ட ஹெச்.ராஜா!!

மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் இணைப்பு தமிழ் என குரல் கொடுத்து வருகின்றனர்.

அதில் ஏஆர் ரகுமான் தமிழ்தான் இணைப்பு மொழி என கூறியதும் தமிழக மக்கள் அவரை கொண்டாடி வருககின்றனர். இந்த சூழலில் இளையராஜா சொன்ன கருத்துக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய இளையராஜாவை பலர் கடுமையாக சாடி வருகின்றனர். இளையராஜாவின் கருத்துக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகன்றனர்.

குறிப்பாக ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எச்.ராஜா ஆகியோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே போல ஏ.ஆர் ரகுமானின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய ஹெச்.ராஜா, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை கொண்டுவந்து, அதன்மூலம் முன்னேற்றம் அவர்களை சென்றடைந்து இருக்கிறது. அம்பேத்கர் உயிரோடு இருந்தால் நிச்சயம் இதை பாராட்டியிருப்பார்’, என இசையமைப்பாளர் இளையராஜா தெளிவாக கூறியிருக்கிறார்.

இதற்காக இளையராஜா எதையோ எதிர்பார்த்து தான் இப்படி கருத்து சொல்லியிருக்கிறார் என்று பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லாருடைய மனதிலும் ஒரு மனமாற்றம் வரும். அப்படி ஒரு மாற்றம் ஒரு பிரபலமான நபருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்பதாலேயே இப்படி விமர்சனங்கள் எழுகின்றன… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘தமிழ் மொழி தான் இணைப்பு மொழியாக வரவேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்காக அவரது பெயர் தமிழா? இளையராஜா சொன்னது இயல்பானது ஆனால் ஏ.ஆர் ரகுமான் சொன்னது உள்நோக்கம் கொண்டது. இளையராஜா கருத்து சொல்ல அதிகாரம் உள்ளது. ஆனால் திராவிடியன் ஸ்டாக் தான் நினைக்கின்ற கருத்தை தான் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறது. பிரதமர் மோடி மீது தமிழகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். அதனால் இளையராஜாவின் கருத்து மாற்றி விடும் என்பதால் அவரை இழிவுபடுத்துகிறார்கள்.

திராவிடம் என்பது இனமா? இடமா? நானும் திராவிடன் தான், குஜராத் கூட திராவிட பிதேசம்தான், பிரதமர், எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாமலை என அனைவருமே திராவிடர்கள்தான்.

திராவிடர்கள்தான் தமிழ்நாட்டை ஆளுவார்கள், வேண்டுமென்றே மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர்.இது சரியில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 1வருடம் ஆக போகிறது. ஆனால் தன்னுடைய வாக்குறுதி குறித்து முயற்சி கூட செய்யவில்லை.

நீட்தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுவது வீண் முயற்சி, இது மக்களை ஏமாற்றும் முயற்சி. 2017ம் ஆண்டு இதே போல கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி திருப்பி அனுப்பினார். மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநருக்கு காலக்கெடு என்பது கிடையாது என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

31 minutes ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

44 minutes ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

2 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

2 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

3 hours ago

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…

3 hours ago

This website uses cookies.