மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவில் ஜப்பானிய சமூகத்தின் மிகப்பெரிய தாயகமாக சென்னை திகழ்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019-ஆம் ஆண்டில் ஜப்பான் விமான நிறுவனம், சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவை தொடங்கியதாகவும், கொரோனா தொற்று பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருகிற ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு நடத்தவுள்ள நிலையில், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்களை இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் தன்னை சந்தித்தபோது முன்வைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனவே, சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.