கம்பீரக் குரல் மறைந்தது : 6 மாதமாக நோயுடன் போராடிய செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணம்,..

Author: Sudha
26 ஜூலை 2024, 1:59 மணி
Quick Share

பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் சௌந்தர்யா அமுதமொழி.

கடந்த 6 மாத காலமாக இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்காக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்ட நிலையில் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 5.51 லட்சமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் 5 லட்சமும் நிதியுதவி அளிக்கப்பட்டது.

நீண்டகாலமாக சிகிச்சையில் இருந்த சௌந்தர்யா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தன்னுடைய தெளிவான உச்சரிப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றால் தனித்துவம் பெற்றிருந்தார்.சௌந்தர்யாவின் மறைவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 435

    0

    0