சென்னை : சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுரை பள்ளி மாணவன் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிகட்டில் தொங்குவதை சாகசமாக நினைத்து வருகின்றனர். இதன் விபரீதத்தை உணராத அவர்கள், அதனைக் கண்டிப்பவர்களை ஏளனப்படுத்துவதும், அவமானப்படுத்துவம் கூட நடந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் அத்துமீறி செய்த செயல் அரசுப் போக்குவரத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயிலை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் என்பவர், கொட்டூரில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சில தனியார் பள்ளி மாணவர்கள் படிகட்டில் தொங்கியபடியும், பேருந்தின் மேல் ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் காளிதாஸ் போக்குவரத்து போலீசாரிடம் முறையிட்டுள்ளார்.
அதன்பேரில், அட்டகாசம் செய்த பள்ளி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர், அதே பேருந்து பெரம்பூர் பேரக்ஸ் வழியாக வந்து கொண்டிருந்த போது, 4 மாணவர்கள் பேருந்தில் ஓடி வந்து ஏறினர். அப்போது, தினேஷ்(19) என்ற மாணவன், போலீஸில் புகார் அளித்த ஓட்டுநர் காளிதாஸின் கன்னத்தில் இரு முறை அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும், 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட கீழ்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன், மாணவர் தினேஷை கைது செய்தார். மேலும் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்களின் மகன் உட்பட 3 சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.