ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் : பிரதமர், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்? தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் கைது!!

தஞ்சை : ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக அதன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரித்து ராஜ், கிருஷ்ணா தீக்சித், ஜேஎம் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பில் இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான ஒன்று அல்ல என்றும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவித்து ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது

இதையடுத்து ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்கக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் தெற்கு மாவட்ட தலைவராக அதிரை ராஜிக் என்பவர் தலைமை வகித்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நெல்லையை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மான் என்பவர், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறுகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் மோடியை தூக்கிலிட வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் உணர்ச்சிவசப்படும் சமூகம், நீதிபதிகளுக்கு விபத்து ஏற்பட்டால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் காரணம் என பேசியதோடு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவின.

அவரது பேச்சுக்கு பாஜக, இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி உள்ப பல்வேறு அமைப்புகள் கண்டன தெரிவித்த நிலையில் ஏரிப்புறக்கரை விஏஓ கௌரி சங்கர், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நேற்று இரவு வல்லம் பகுதியில் ஜமால் முமகது உஸ்மானை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…

1 hour ago

வெளியே வந்ததும் உன்னை கொன்னிடுவேன்… நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்!

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…

1 hour ago

குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!

களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…

2 hours ago

பாக்யராஜ் மகள் தற்கொலைக்கு முயல காரணம் இந்த நடிகரா? போட்டுடைத்த பிரபலம்!

நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…

3 hours ago

ஆழியாருக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவர்கள் 3 பேர் நீரில் முழ்கி பலி : காண்போரை உருக்குலைத்த காட்சி!

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…

4 hours ago

சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?

சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.