புதுக்கோட்டை ; அமைச்சர்களுக்குள் நடக்கும் மோதலை முதலமைச்சர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- காசியில் தமிழ் சங்கமம் நடத்துவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதை வைத்து பாஜக வளர வேண்டும் நினைத்தால் அது நடக்காது.
கால்பந்து வீராங்கனை இறப்பு தொடர்பாக மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்கள் மீது காவல்துறை கிரிமினல் வழக்கு தொடர்வது ஏற்புடையது அல்ல. கிரிமினல் வழக்கு தொடர்ந்தால் எந்த மருத்துவரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயங்குவார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி என்பது நியமன பதவி தான். காங்கிரஸ் தலைவர் பதவி தன்னிடம் கொடுத்தால் சிறப்பாக செயல்படுவதற்கு தயாராக உள்ளேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் என்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. உட்கட்சி பிரச்சனையை அலுவலகத்திற்குள் பேசி தீர்த்து இருக்க வேண்டும்.
நிதி அமைச்சருக்கும், கூட்டுறவுத் துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதை தமிழக முதல்வர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மார்க் விற்பனை அதிக அளவில் நடக்கும்போது, அந்த நிதி தன்னுடைய துறைக்கு வரவில்லை என்று நிதி அமைச்சர் கூறுவது வியக்கத்தக்கதாக உள்ளது, எனக் கூறினார்.
சமீப காலமாக பல இடங்களில் குண்டுவெடிப்பு நடந்து வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாத செயல் யார் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதிமுக விவகாரத்தில் இரட்டை தலைமை அந்த கட்சிக்கு ஒத்து வராது என்று பலமுறை நான் கூறியுள்ளேன். அது வழி தான் நடந்து வருகிறது. அதிமுகவில் நடப்பது வேடிக்கையாக உள்ளது.
அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக வளர வேண்டும் என்று நினைத்தால், அது தவறாக தான் முடியும். பாஜக தமிழகத்தில் வளர வேண்டும் என்று நினைத்தாலும், அது ஒரு எல்லை தான். எல்லையை தாண்டி அவர்களால் வர முடியாது. பாஜக எந்த யுக்தியை பயன்படுத்தினாலும் தமிழக மக்கள் மனதில் அவர்களால் இடம் பிடிக்க முடியாது, எனக் கூறினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.