புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அசுத்தமான தண்ணீரே காரணம் என அங்குள்ள மக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
10பேரில் சிலர் தனியார் மருத்துவமனையிலும், சிலர் அரசு மருத்துவமனையிலும், ஒரு சிலர் நாட்டு மருந்து வைத்தியத்தையும் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அப்பகுதி மக்கள் மஞ்சள் காமாலை தொற்றால் ஏற்கனவே ஒரு குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரமாக மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.நோய்த் தொற்றை கண்டறியவும் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயலோக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொது மக்கள் இது குறித்து அச்சமைடய தேவையில்லை எனவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் சொல்லி உள்ள மாவட்ட நிர்வாகம் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.