ரஜினி மனிதரே இல்ல… அவருக்கு அரசியலும் வேணாம், ஆளுநர் பதவியும் வேணாம் : ஜெயிலர் பட நடிகர் பரபரப்பு பேச்சு!!

ரஜினி மனிதரே இல்ல… அவருக்கு அரசியலும் வேணாம், ஆளுநர் பதவியும் வேணாம் : ஜெயிலர் பட நடிகர் பரபரப்பு பேச்சு!!

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகிபாபு மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இப்படத்தின் 25 வது நாளை ரஜினி ரசிகர்கள் வெகு விமர்சையாக பல்வேறு திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் 25 வது நாளையொட்டி ஏராளாமான ரசிகர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினி பட பேனர்களுக்கு மாலை அணிவித்து, சூடமேற்றி பூசணிக்காய் சுற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து அம்பிகா திரையரங்கம் முன்பு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உற்சாகத்தோடு ஈடுபட்டனர்.

தொடர்ந்து அம்பிகா திரையரங்கிற்கு வந்த நடிகர் சரவணனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். தொடர்ந்து ஜெயிலர் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் நடிகர் சரவணனை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் சரவணனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சரவணன் பேசுகையில்,
நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் போல. இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என அவருக்கு எல்லாமே தெரியும்.

ரஜினியின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய ஒரே மாதத்தில் ஹீரோ ஆனவன் நான். ஜெயிலர் படம் ஹிட் ஆகும் எனத்தெரிந்து தான் ரஜினி இமயமலைக்கு சென்றார்.

ரஜினியின் வாக்கு சித்தர் வாக்கு மாதிரி. ரஜினி ஒரு கடவுள் தான்.
ரஜினி ஒரு சித்தர். அதை மதுரையில் உட்கார்ந்து கொண்டு சொல்கிறேன்.
ரஜினி சாரிடம் எல்லாமே எனக்கு பிடிக்கும், அவர் பிடிக்காத ஒன்று என்பது இல்லவே இல்லை. நடந்தால் பிடிக்கும், திரும்பினால் பிடிக்கும்,

ரஜினி சாரை பார்த்து இன்று வரை ரஜினி சார் மாதிரி சட்டை போட்டு வருகிறேன். ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு, ஆளுநர் பதவியெல்லாம் ஒன்றும் அவருக்கு வேண்டாம். அவர் நன்றாக உடல்நலத்தோடு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அவர் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தா போதும். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேணம். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, பாவம் வேணாம். விட்டுருங்க அவர. அரசியலுக்கு அவர் வர வேண்டாம் நிம்மதியாக இருக்கட்டும் என பேசினார். அவர மீடியா அரசியலுக்கு இழுக்காதிங்க.

ஒபிஎஸ் ரஜினி சந்தித்து என்ன பேசினார்கள் என யாருக்குமே தெரியாது. சாப்பிட்டிங்களா குடும்பத்தில் எல்லோரும் எப்படி இருக்காங்க என்று கூட பேசி இருக்கலாம் என பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

13 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

13 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

13 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.