நாம் இந்தியர் என்கிற பெருமையோடு, அனைவரும் தேசிய கொடியேற்றி, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதனை மத்திய அரசு உற்சாகமாகக் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இல்லந்தோறும் மூவர்ணக் கொடியை பறக்க விட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
அதனை ஏற்று, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தேசிய கொடியை ஏற்றி, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா பிரபலங்களில் முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டு வாயிலில் தேசியக் கொடியை பறக்க விட்டார். அதேபோல், நடிகர் விஜய்யும், தனது மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டிருந்தார்.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை மக்கள் ஏற்றுவதன் அவசியம் என்ன என்பது குறித்தும், மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தும் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியதாவது :- இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருஷங்கள், பல லட்சம் பேர், எவ்வளவோ சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவிச்சிருக்காங்க. எத்தனையோ பேர் அவர்களது உயிரையே தியாகம் பண்ணிருக்காங்க.
அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ந் தேதி, ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு 2 அல்லது 3 அடி நீளம் கொண்ட கம்பில் நமது நாட்டின் தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டின் முன் அந்த கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம். நாடு இல்லைன்னா நாம இல்ல, நாம் எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமைகொள்வோம். ஜெய் ஹிந்த்” என கூறினார்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.