16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் கேப்டன் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, கேப்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் கோதாவில் குதிக்கின்றன
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் , பின்னர் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும், ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் நிதிஸ் ராணா , ரிங்கு சிங் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராணா 42ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து வந்த ரசல் அதிரடி காட்டி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ரிங்கு சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 171ரன்கள் எடுத்து . ஹைதராபாத் சார்பில் மார்கோ ஜான்சன் , நடராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கினர் ஐதராபாத் வீரர்கள் அபிஷேக் மற்றும் மயங்க். அபிஷேக் 9 ரன்னிலும் மயங்க் 18 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து வந்த திரிபாதி மெதுவாக ஆடினார். உடன் கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த போது திரிபாதி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ப்ரூக் களமிறங்கினார்.
இரு அணிகளும் 6 புள்ளிகளை பெற்றுள்ளதால் 10 புள்ளிகள் பெற இரு அணிகளும் தீவிரமாக விளையாடி வருகன்றன. 6.2 ஓவர் முடிவில் ஐதராபாத் 4 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
This website uses cookies.