16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் கேப்டன் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, கேப்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் கோதாவில் குதிக்கின்றன
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் , பின்னர் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும், ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் நிதிஸ் ராணா , ரிங்கு சிங் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராணா 42ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து வந்த ரசல் அதிரடி காட்டி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ரிங்கு சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 171ரன்கள் எடுத்து . ஹைதராபாத் சார்பில் மார்கோ ஜான்சன் , நடராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கினர் ஐதராபாத் வீரர்கள் அபிஷேக் மற்றும் மயங்க். அபிஷேக் 9 ரன்னிலும் மயங்க் 18 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து வந்த திரிபாதி மெதுவாக ஆடினார். உடன் கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த போது திரிபாதி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ப்ரூக் களமிறங்கினார்.
இரு அணிகளும் 6 புள்ளிகளை பெற்றுள்ளதால் 10 புள்ளிகள் பெற இரு அணிகளும் தீவிரமாக விளையாடி வருகன்றன. 6.2 ஓவர் முடிவில் ஐதராபாத் 4 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.