தமிழகத்தில் நாளை வழக்கம் போல் ரேஷன் கடைகள் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசு இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு அமல்படுத்தி வந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதாக கூறி தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு ஆகியவற்றை திரும்பப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு வந்தது.
அதன்படி ரேஷன் கடைகளும் இயங்கவில்லை. தற்போது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு இல்லை என்பதால் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படுமா? இல்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழக்கம் போல் செயல்படும். நாளை ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்ரவரி 26ம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
This website uses cookies.