டிரெண்டிங்

செந்தில்பாலாஜியை ராவணன் என கூறிய ஸ்டாலின் இன்று ராமன் என சொல்கிறார் : சீறும் ஆர்.பி உதயகுமார்!

செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி.உதயகுமார் கேள்வி
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் அதிமுக வளர்ச்சி பணி குறித்தும் ,மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் சிக்கந்தர் சாவடியில்நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை ஒன்றிய செயளாலர் அரியூர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார், கழக மகளரணி இணைச்செயளாலர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

ஆர் பி.உதயகுமார் பேசியதாவது, எதிர்க்கட்சியாக இருந்தபோது கனிமொழி தமிழ்நாட்டில் விதவைகள் அதிகரித்துவிட்டன என்று கூறினார். தற்போது ஸ்டாலின் ஆட்சியில் விதவைகள் அதிகரித்தது மட்டுமல்லாது, மதுவினால் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இதை தடுத்து நிறுத்த முடியவில்லை, முதலமைச்சர் உண்மையான உத்தரவு போடுகிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதையெல்லாம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இதே செந்தில் பாலாஜியை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் பத்து தலை ராவணன் என்றும், அவரது தம்பியை அசோகன், கும்பகர்ணன் இருவரும் அரக்கர்கள் என்றும் கூறினார் ஆனால் இன்றைக்கு தியாகிகள் என்று கூறுகிறார்.

அன்றைக்கு ராவணனாக தெரிந்தவர் இன்றைக்கு ராமனாக தெரிகிறாரா?அதிமுகவில் உள்ள ரெண்டு கோடி தொண்டர்களும் ராமனாக இருந்து எடப்பாடியாருக்கு பாட்டாபிஷேகம் சூட்டுவார்கள்.

செந்தில் பாலாஜி எதற்காக உள்ளே சென்றார் என்று அனைவருக்கும் தெரியும்,திமுகவில் மிசா போன்ற சட்டங்களில் பாடுபட்டும், ஸ்டாலினுக்காக உயிரை கொடுக்க நினைத்தவர்களை ஸ்டாலின் பார்த்ததுண்டா? அதேபோல் திமுக மூத்த தலைவர்களான வேலு, நேரு, பெரியசாமிக்கு இல்லாத மரியாதையை தற்போது செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

போதை பொருள் நடமாட்டத்தின் நெட்வொர்காக தமிழகம் உள்ளதாக கூறப்படுகிறது .தற்போது கூட போதை பொருள் பிடிபட்டுள்ளது சிறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் மூலம் செய்யப்பட்டதாக தகவல் கூறி வருகிறார்கள்.

ஸ்டாலின் வெளிநாடு சென்றார் இது குறித்து எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்டார் ஆனால் அது குறித்து ஏதும் வெளியிடப்படவில்லை இதை தொடர்ந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்து கழக அம்மா பேரவையின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் வருகின்ற ஒன்பதாம் தேதி மதுரை பழங்காநத்தில் நடைபெறுகிறது.

தற்போது முதலமைச்சர் டெல்லி சென்று மூன்று கோரிக்கையை வைத்ததாக கூறுகிறார் இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக உள்ளது அதன் பயன் பிரதமர் கையில் தான் உள்ளது என்று கூறுகிறார்.

மேலும் படிக்க: ஐஸ்கிரீம் வண்டியால் பறிபோன உயிர்.. மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்த பெண்!

என்ன கோரிக்கை கல்வி நிதி, ஜிஎஸ்டி நிதி மெட்ரோ ரயில் நிதி ஆகியவற்றை சொல்லி வலியுறுத்தினாரா இல்லை தனது மகன் உதயநிதியை துணை முதல்வராக்க சென்றாரா? செந்தில்பாலாஜி வழக்குகாக சென்றாரா?

தற்பொழுது கூட உதயநிதியை துணை முதலமைச்சராக ஏமாற்றம் இருக்காது மாற்றம் வரும் என்று கூறுகிறார் இது யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை .தமிழக மக்களின் மூன்று கோரிக்கையாக சென்றதாக கூறுகிறார் தமிழக மக்களுக்காகவா? இல்லை உதயநிதி துணை முதலமைச்சராக்க நேரம் கேட்கவா? இதற்குரிய விளக்கத்தை இன்னும் சொல்லவில்லை.

இன்றைக்கு திமுக கூட்டணி கட்சிகள் மீது ஸ்டாலின்அச்சம் கொண்ட காரணத்தால், ஏற்கனவே திமுக பவள விழா நடைபெற்றது தற்போது மீண்டும் பவள விழாவை நடத்துகிறார்.

கூட்டணி கட்சிக்காகத்தான் இந்த பவள விழாவை மீண்டும் நடத்துகிறார் .திருமாவளவன் தெளிவான கருத்து சொல்லிவிட்டார் ஆகவே மக்கள் உரிமைகள், மக்களுக்காக உழைக்க கூடிய கட்சிகள் எல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அணிவகுக்க வேண்டும் என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

3 minutes ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

18 minutes ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

35 minutes ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

2 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

3 hours ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

3 hours ago

This website uses cookies.