கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல் மறுகூராய்வு பணி தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாணவி உடல் பிற்பகல் ஒரு மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும் என கூறியிருந்த இருந்த நிலையில், தற்போது தான் தொடங்கியுள்ளது. மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறு பிரேத பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. மறு பிரேத பரிசோதனை நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவியின் பெற்றோர் தற்போது வரை வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மறு உடற்கூராய்வு செய்வதற்கு முன்பு பள்ளியில் மாணவி இறந்து கிடந்த இடத்தில் மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் மறு உடற்கூராய்வை பெற்றோர் இல்லாமலே நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
உடல் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் முறையீடு செய்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பெற்றோர் வரவில்லை என தகவல் கூறப்படுகிறது. இருப்பினும், மறு உடற்கூராய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி எஸ்பி ஜியா உல் ஹக் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக ஸ்ரீமதி தங்கி இருந்த விடுதி அறை மற்றும் அவர் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்படும் இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு ரத்தக்கறை படிந்ததாக கூறப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து அந்த தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக ஸ்ரீமதி சடலமாக கிடந்த இடத்தில் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி விழுந்ததாக கூறப்படும் 3வது மாடியில் பெண் போன்று ஒரு பொம்மையை கீழே வீசி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.