32 வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் திருடனை திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு துரத்திச் சென்று காவல்துறை பிடித்த காட்சி சிசிடிவியில் சிக்கியது.
ஒரு அதிரடி திரைப்பட காட்சியை நினைவூட்டும் வகையில் இது அமைந்தது.பெங்களூருவில் 50 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 32க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒருவரை தனது உயிரைப் பணயம் வைத்து, பெங்களுரு போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தின் முன் பாய்ந்து பிடித்தார்.ஆகஸ்ட் 6-ம் தேதி பெங்களூரு சதாசிவ நகரில் நெரிசல் மிகுந்த சந்திப்பில் இந்த சம்பவம் நடந்தது.
துமகுரு மாவட்டத்தில் உள்ள கொரடகெரே காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரியும் தோட்டா லிங்கய்யா என்ற போலீஸ் கான்ஸ்டபிள், குற்றவாளியான மஞ்சேஷ் என்கிற ஹோட்டே மஞ்சாவை தேடி வந்தார்.
32 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்த குற்றவாளி கான்ஸ்டபிள் பிடித்த பின்னும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றார். இந்நிலையில் கான்ஸ்டபிள் குற்றம் சாட்டப்பட்டவரின் காலை சினிமா பாணியில் இறுக்கமாக பிடித்துள்ளார். சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கான்ஸ்டபிள் தொட்ட லிங்கய்யா, இறுதியில் அவரைப் பிடிப்பதில் வெற்றி பெற்றார். உயர் போலீஸ் அதிகாரிகள் கான்ஸ்டபிளின் துணிச்சலை பாராட்டினர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.