32 வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் திருடனை திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு துரத்திச் சென்று காவல்துறை பிடித்த காட்சி சிசிடிவியில் சிக்கியது.
ஒரு அதிரடி திரைப்பட காட்சியை நினைவூட்டும் வகையில் இது அமைந்தது.பெங்களூருவில் 50 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 32க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒருவரை தனது உயிரைப் பணயம் வைத்து, பெங்களுரு போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தின் முன் பாய்ந்து பிடித்தார்.ஆகஸ்ட் 6-ம் தேதி பெங்களூரு சதாசிவ நகரில் நெரிசல் மிகுந்த சந்திப்பில் இந்த சம்பவம் நடந்தது.
துமகுரு மாவட்டத்தில் உள்ள கொரடகெரே காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரியும் தோட்டா லிங்கய்யா என்ற போலீஸ் கான்ஸ்டபிள், குற்றவாளியான மஞ்சேஷ் என்கிற ஹோட்டே மஞ்சாவை தேடி வந்தார்.
32 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்த குற்றவாளி கான்ஸ்டபிள் பிடித்த பின்னும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றார். இந்நிலையில் கான்ஸ்டபிள் குற்றம் சாட்டப்பட்டவரின் காலை சினிமா பாணியில் இறுக்கமாக பிடித்துள்ளார். சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கான்ஸ்டபிள் தொட்ட லிங்கய்யா, இறுதியில் அவரைப் பிடிப்பதில் வெற்றி பெற்றார். உயர் போலீஸ் அதிகாரிகள் கான்ஸ்டபிளின் துணிச்சலை பாராட்டினர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.