இதென்ன கருமம்… முன்னாள் முதலமைச்சர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுங்க : பெண் அமைச்சர் காட்டம்!!!

நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் நெரிசல் காரணமாக 8 பேர் பலியான சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.

ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா இன்று காலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர். கோயிலுக்கு வெளியே அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நேற்று இரவு நடந்த சம்பவம் மிகவும் துயரமானது. எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது விளம்பரத்திற்காகவே அதிக தொண்டர்களை வரவழைத்து கட்டுக்கடங்காத கூட்டத்தை கூட செய்து நடைபெற்ற துயரத்திற்கு காரணமாக அமைந்து விட்டார். சரியான விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு முழு காரணம் சந்திரபாபு நாயுடு மட்டும்தான். இதனால் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

அதேபோல் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 கோடியும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

5 minutes ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

12 minutes ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

55 minutes ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

1 hour ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

This website uses cookies.