ஆளுநர் பதவி ராஜினாமா.. பாஜக வேட்பாளராகும் தமிழிசை : இந்த முறை குறி தூத்துக்குடிக்கு அல்ல..!!!
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வரிசையாக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதுவரை வெளியிட்ட பட்டியல்களில் தமிழ்நாடு சார்பாக களமிறங்கும் வேட்பாளர்கள் பெயர் எதுவும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில்தான் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். இதனால் எங்கே அவர் வேட்பாளராக களமிறக்கப்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆக்டிவ் அரசியலில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை 8 செப்டம்பர் 2019 அன்று தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின் 18 பிப்ரவரி 2021 அன்று தமிழிசை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அங்கே கனிமொழி 563,143 வாக்குகள் பெற்று வென்றார். அதே சமயம் தமிழிசை 215,934 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தூத்துக்குடி அல்லது தென் சென்னை அல்லது நெல்லை அல்லது புதுச்சேரியில் இருந்து பாஜக வேட்பாளராக இவர் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.