சிமெண்ட் முதல் ஜல்லி வரை…கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு: விலையேற்றத்தால் ஷாக்..!!

சமையல் எண்ணெயை தொடர்ந்து கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் 2 வாரங்களையும் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் காரணமாக இருநாடுகளிலும் மனித உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை இருநாடுகளும் வெளியிடவில்லை.

இந்த போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், கச்சா எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்படி, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.380க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டை தற்போது ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், முதல் மற்றும் இரண்டாம் தர கம்பிகள் டன் ஒன்றுக்கு ரூ.75,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.20,000 உயர்ந்து ரூ.95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

M-sand (1 யூனிட்) ரூ.2,800க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.3,500க்கும், p-sand ரூ.3,500க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.4,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கால் இன்ச் ஜல்லி ரூ.2,500ல் இருந்து ரூ.3,300ஆகவும், கிராவல் மண் 1 யூனிட் ரூ.1,500ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல் ஒன்று ரூ.8.50க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.11.50க்கும், பிளைஏஷ் ஒன்று ரூ.6.50க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.9000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…

2 hours ago

Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…

2 hours ago

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…

3 hours ago

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

16 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

17 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

17 hours ago

This website uses cookies.