ரூ.30 ஆயிரம் கோடி ஊழல்… திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் : குரலெழுப்பிய அதிமுகவின் வைகைச்செல்வன்!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தலை அதிமுகவினர் திறந்து வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகைசெல்வன், மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து செயல்படுவது தான் அதிமுகவும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வெயிலில் தாக்கத்தில் இருந்து மக்களின் தாகத்தை தனக்கு வகையில், இந்தியாவிலேயே முதல் முதலாக நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து எடப்பாடியாரும் இரு பெரும் தலைவர்கள் வழியில் நீர் மோர் பந்தலை திறந்து மக்களின் தாகத்தை தனித்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடியை உதயநிதியும், சபரிசனும் கொள்ளை அடித்து உள்ளதாகவும், .இதை அதிமுக சொல்லவில்லை அதன் ஒப்புதல் வாக்குமூலத்தை அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜனே ஆடியோ பதிவில் கூறியுள்ளதாக கூறினார்.

இந்தியாவில் வியக்கத்துக்கு வகையில், 2ஜி ஊழலை செய்து உலக அரங்கில் தமிழகத்தை தலைக்குனிய செய்தது திமுக. தற்போது 30 ஆயிரம் கோடியை பதுக்கி வைக்க சபரிசனும்,உதயநிதியும் திணறி வருகின்றனர் என்று, நிதி அமைச்சர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த ஆடியோவில் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது என்று நிரூபித்தால் ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யலாம். ஆனால் தற்போது உள்ள குற்றச்சாட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மதுரையில் மேயர்கள் ,அமைச்சர்கள் ஆக இருவருக்கும் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. முரண்பாடு மொத்த உருவமாக அரசு உள்ளது. மதுரை நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தில் மக்களுக்காக வழங்கப்படும் பாஸ்கள் சரிவர கொடுக்கவில்லை என்று பக்தர்கள் வேதனையாக உள்ளதாக வைகை செல்வன் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

19 minutes ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

45 minutes ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

46 minutes ago

டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!

திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…

2 hours ago

500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்

வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…

2 hours ago

ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…

2 hours ago

This website uses cookies.