‘தப்பித்து விட்டார் செந்தில் பாலாஜி… ஆண்டவன் தான் காப்பாத்திருக்கான்’… போற போக்கில் அண்ணாமலைக்கு சவால் விட்ட ஆர்எஸ் பாரதி!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாம் அனைவரும் இரங்கல் தீர்மானம் வாசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பரபரப்பாக பேசியுள்ளார்.

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :- திமுக அரசை தமிழகத்திற்கு பெட்டி தூக்கிட்டு வந்தவன் (ஆளுநர்) குறை கூறினால் திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. காமராஜர் மறையும் வரை அவருக்காக அனைத்தையும் செய்து கொடுத்தது திமுக. காமராஜருக்கு சிலை வைத்த கட்சி திமுக தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இது தற்போது உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு கூட தெரியாது.

இந்நிலையில் காமராஜர் பிரதமர் ஆவதை திமுக தடுத்தது என்று அண்ணாமலை பேசி வருகிறார். காமராஜர் பிரதமர் பதவியை ஒருநாளும் விரும்பவில்லை. நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருத்தர் பிரதமராக வரவேண்டும் என விரும்பியவர் காமராஜர். டில்லியில் 1966 ஆம் ஆண்டு காமராஜர் வாழ்ந்த வீட்டை தீ வைத்த கொளுத்தி, அவரை கொல்ல முயன்றவர்கள் அன்றைய ஜன சங்கத்தினர், இன்றைய பா.ஜ.க வினர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

அங்கிருந்த திமுக தொண்டன் கோதண்டபானி என்பவர் வீட்டுக்குள் புகுந்து காமராஜரை காப்பாற்றி உள்ளார். காமராஜர் இறந்த போது அவருக்கு அரசு மரியாதை செலுத்தி மணி மண்டபமும் கட்டிக்கொடுத்தவர் கருணாநிதி. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என வி.பி.சிங்கிடம் கோரிக்கை வைத்து, அதனை வி.பி.சிங் மூலம் நிறைவேற்றி தந்தார் கலைஞர். மேலும், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. கலைஞர் வழியில் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி, தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள வழக்கு அயோக்கியத்தனமானது. அவரை கைது செய்த போது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது. நீதிமன்றமும் நேற்று அதை உறுதி செய்துள்ளது. அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அவர் உயிர் பிழைத்தார். இல்லையென்றால் அவர்கள் செய்த சித்திரவதையில் உயிரிழந்திருப்பார். அவருக்கு நாம் இரங்கல் தீர்மானம் தான் வாசித்திருக்க வேண்டியிருக்கும். அதில் இருந்து அவர் தற்போது தப்பித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அஜித் பவார் மீது வழக்கு உள்ளது. அவர் பா.ஜ.க விற்கு சென்ற உடன் அங்கே இருக்கும் ஆளுநர் அவருக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இங்கே உள்ள ஆளுநர் உயர்நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு கூறினாலும், அவர்கள் இருவரும் அமலாக்கத்துறைக்கு கஷ்டடி கேட்க அதிகாரம் இல்லை என்பதை கூறி உள்ளார்கள். இதன் மூலம், அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது உறுதியாகிறது. தி.மு.க விடம் சட்ட ரீதியாக மோதியவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அது ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது முதல் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வாங்கியது வரை திமுகவின் சட்டத்துறையே வென்றுள்ளது. எங்களிடம் மோதி ஒரு போதும் யாரும் வெற்றி பெற முடியாது.

ஆளுநர் என்ன நிலைமைக்கு செல்ல போகிறார்கள் என்பது இன்னும் 10,15 நாட்களில் தெரியவரும். தி.மு.க தொண்டர்கள் கட்சிக்கு ஒரு சோதனை என்றால் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். முதலமைச்சர் பெங்களூர் சென்றால் தடுப்போம் என அண்ணாமலை கூறி உள்ளார். அண்ணாமலைக்கு துணிச்சல் இருந்தால், ஆண் மகனாக இருந்தால், சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவேன் என்றால், முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும், திமுகவினர் யார் என்று அப்போது தெரியும் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறியதாவது :- இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அமைப்புச் செயலாளர் பாரதி அவர்கள் திமுக கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவரது இருப்பை காட்டிக் கொள்வதற்காக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறார். ஆனால் திமுகவை சேர்ந்த எவரும் அண்ணாமலைக்கு பதில் அளிக்கவில்லை.

இன்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் ஒட்டுமொத்த கேள்விக்கும் பதில் கூறியுள்ளார். ஏனென்றால் திமுக மறைந்த முன்னாள் தலைவர் கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப்பற்றி எதிர்க்கட்சிகள் பேசும் போது அவர்களுக்கு நாம் பதில் அளித்தால், அதை ஊடகங்கள் எழுதுவார்கள் என்று நினைத்து அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்தமாக ஆர் .எஸ். பாரதி அவர்கள் பதில் அளித்துள்ளார்.

அண்ணாமலை பற்றியும் பயப்பட வேண்டியதில்லை. இங்கு இருக்கும் அதிமுகவை பற்றியும் பயப்பட வேண்டியது இல்லை. திருச்சி என்றும் தளபதியின் கோட்டையாக விலகும் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். கழகத்தின் சில பணி சுமையா உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. நான் உங்களில் ஒருவன் எப்போதும் உங்கள் கூட தான் இருப்பேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் முழுமையாக நிறைவேற்றுவேன்.

திருச்சி பொருத்தவரை கலைஞர் மட்டுமல்ல நமது முதல்வர் ஸ்டாலின் அவர்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். எண்ணற்ற பல திட்டங்களை திருச்சிக்கு முதன்மையாக கொடுத்து பணிகளை விரைந்து செய்யவும் ஆணையிட்டு உள்ளார். குறிப்பாக திருச்சியை பொறுத்தவரை அதிமுக கோட்டையை பிடிக்க முடியாது .இன்று மட்டுமல்ல எப்போதும் திருச்சி திமுக வசம் தான் இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

7 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

8 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

9 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

9 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

9 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

10 hours ago

This website uses cookies.