திமுகவில் உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்றும், உழைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது :- இங்கு இருக்கும் பாதி பேருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற வேதனை இருக்கும். உழைத்தும் பதவி கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் இருப்பது நியாயம் தான். காரணம் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை. உழைக்காதவர்கள் பதவிக்கு வந்திருப்பது வேதனையாகத்தான் இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர்.
கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள். திமுகவுக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் பதவி தேடி வரும். அதற்கு நான் உதாரணம். கட்சிக்கு நான் அழைத்து வந்தவர்கள் எம்எல்ஏ, அமைச்சர் ஆகிவிட்டனர். ஆனால் எனக்கு காலதாமதமாக வந்தது. காரணம் ஒரே கொடி, ஒரே கட்சி, ஒரே தலைவர் என இருந்ததாலும் 63 வயதில் எம்பி பதவி கிடைத்தது.
கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் அவ்வளவு எளிதாக பதவி கிடைக்காது. இதையெல்லாம் ஜீரணித்து கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். பொறுமையாக இருந்தால் என்றைக்காவது பதவி வந்துவிடும் என கட்சிக்குள் வந்துள்ள இளைஞர்களுக்கு தான் இதை சொல்லுகிறேன், என தெரிவித்தார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.