ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிகழ்ந்து வருவதன் எதிரொலியாக, இந்தியாவில் வர்த்தக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயருகிறது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 5வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டிசல் விலையில் மாற்றம் இல்லை. அநேகமாக இந்த வார இறுதிக்குள் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயருகிறது. இதனால், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.2,012க்கு விற்பனையாகிறது. இதேபோல, 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.27 உயர்ந்து, ரூ.569க்கு விற்கப்பட உள்ளது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்வில்லை.
இதேபோன்று தமிழகத்தில் வர்த்தக உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமுல் இல்லாமல், ரூ.915.50க்கு விற்பனையாகிறது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
This website uses cookies.