தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் சிறப்பு மிக்க தலமாக விளங்குவது திருச்சி மாநகரில் அமைந்துள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு செல்லும் நால்ரோடு பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் சிமெண்ட் மற்றும் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு உள்ளது.
நேற்றிரவு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று நுழைவாயிலின் வழியே வந்துள்ளது.லாரியில் அதிக அளவு மூட்டைகள் அடுக்கப் பட்டிருந்ததால் மூட்டைகள் தூணின் மீது மோதியுள்ளது இதனால் இரண்டு பக்கவாட்டு தூண்களில் ஒரு தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது,மற்றும் மேற்புற வளைவிலும் விரிசல் விழுந்தது.வளைவு எந்த நேரத்திலும் இடித்து விழலாம் என்னும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சமயபுரம் போலீசார் விரைந்து வந்தனர். பேரிகார்டு வைத்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு நுழைவாயில் உள்ளே கனரக வாகனங்கள் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தூணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.ஆடி மாதத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அம்மன் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.